இந்தப் படத்தில் வில்லனாக அரவிந்தசாமி, அருண் விஜய் நடிக்கிறார்கள் என முதலில் தகவல் வெளியானது. அதனை அரவிந்தசாமி உடனடியாக மறுத்தார். பிறகு இது அருண் விஜய், ஆதியாக மாறியது. அதற்கு பதிலளித்த அருண் விஜய், அஜீத் படத்தில் நடிப்பதை ஒப்புக் கொண்டார். ஆனால் வில்லனாக அல்ல எனவும் கூறினார்.
இந்நிலையில் நான் அஜீத் படத்தில் நடிக்கவில்லை என ஆதி விளக்கமளித்துள்ளார்.
ஆதியை நடிக்க வைப்பதற்காக கௌதம் தரப்பு அவரை அணுகியுள்ளது. ஆனால் அந்த வாய்ப்பை ஆதி ஏற்றுக் கொள்ளவில்லை. என்னை நடிக்கக் கேட்டது உண்மைதான், ஆனால் நான் நடிக்க மறுத்துவிட்டேன் என்று ஆதி வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.