தயாரிப்பில் இறங்கிய ரஹ்மானின் சகோதரி ரைஹனா

திங்கள், 27 ஜூலை 2015 (13:49 IST)
இசைப்புயல் ரஹ்மானின் குடும்பம் தீவிர கலைக்குடும்பமாக மாறி வருகிறது. ரஹ்மான் இசையமைக்கத் தொடங்கியதும் அவரது சகோதரி ரைஹனா இசையமைக்க ஆரம்பித்தார். திரைப்படங்கள், தனி ஆல்பங்கள் என்று இசையின் சகல திசையிலும் சஞ்சரித்தார். விரைவில் அவரது மகன் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகி தற்போது நடிகரும் ஆகிவிட்டார்.
 
ரஹ்மானின் மகன் பாடிய பாடல், ஓ காதல் கண்மணியில் இடம்பெற்றது. ரஹ்மான் இசையுடன் கதை, திரைக்கதை எழுதி படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளார். ரைஹனா ஒரு அடி முன்னால். படத்தயாரிப்பை தொடங்கிவிட்டார்.
 
ரைஹனா தனது தோழிகள் இருவருடன் இணைந்து முதல் படத்தை தயாரிக்கிறார். அசார், சஞ்சிதா ஷெட்டி நடிக்கும் இந்தப் படம் ஒரு ரொமான்டிக் காமெடியாக தயாராகிறது. விக்னேஷ் கார்த்திக் என்ற அறிமுக நடிகர் படத்தை இயக்குகிறார். மகன் தற்போது அனைவரும் அறிந்த நடிகராகிவிட்டார். அவரை நடிக்க வைக்காமல் இருந்தால் எப்படி? ஆம், ஜி.வி.பிரகாஷும் இந்தப் படத்தில் ஒரு சின்ன ரோல் செய்கிறார்.
 
விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்