ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜப்பான் விருது

திங்கள், 30 மே 2016 (18:23 IST)
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஜப்பானின் கிராண்ட் ப்ரைஸ் விருதுக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.


 

 
ஜப்பானின் ஃபுக்குவோகா விருது யோகடோபியா என்ற அமைப்பால் ஆசிய கலாச்சாரத்தை பாதுகாக்கும் தனிநபர்களுக்கு வழங்கப்படும் விருதாகும். இந்த விருது கல்வி, கலை ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு கிராண்ட் பிரைஸ் வழங்கப்படுகிறது.
 
இசைத்துறையில் சர்வதேச அளவில் சாதித்ததற்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு இந்த கிராண்ட் பிரைஸ் விருது வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறியதாவது:-
 
ஃபுக்குவோகா பரிசு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஜப்பான் நாட்டின் கவுரவத்துக்கு மிக்க நன்றி, உங்கள் அனைவரின் அன்பு பற்றி தெரிந்துக் கொண்டதில் மிகவும் சந்தோஷம். ஜப்பான் நகரத்துக்கு வருகை தரும் நாளை எதிர்நோக்கியுள்ளேன், என்றார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்