படம் சென்னையின் செயின் பறிப்பு குற்றத்தையும், குற்றவாளிகளையும் மையப்படுத்தியது. இந்தப் படத்துக்காக, எப்படி செயின் பறிப்பை கொள்ளையர்கள் நடத்துகிறார்கள் என்பதை நுணுக்கமாக ஆராய்ந்து படத்தில் வைத்துள்ளார் ஆனந்த் கிருஷ்ணன். கடைசியில் அவரது ஆராய்ச்சியே வினையானது. படத்தில், எப்படி செயின் பறிப்பது என்பதை கற்றுத்தரும் விதத்தில் காட்சிகள் உள்ளன என்று சொல்லித்தான் தணிக்கைக்குழு சான்றிதழ் மறுத்தது. வரைமுறையற்ற வன்முறையும் ஒருகாரணம்.