ஏ சான்றிதழுடன் வெளியாகும் மெட்ரோ

திங்கள், 9 மே 2016 (17:09 IST)
சென்னை தணிக்கைக்குழுவால் சான்றிதழ் மறுக்கப்பட்ட மெட்ரோ திரைப்படம் மறுதணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.


 
 
பாபி சிம்ஹா, சிரிஷ், சென்ட்ராயன் நடித்துள்ள மெட்ரோ திரைப்படத்தை ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். 
 
படம் சென்னையின் செயின் பறிப்பு குற்றத்தையும், குற்றவாளிகளையும் மையப்படுத்தியது. இந்தப் படத்துக்காக, எப்படி செயின் பறிப்பை கொள்ளையர்கள் நடத்துகிறார்கள் என்பதை நுணுக்கமாக ஆராய்ந்து படத்தில் வைத்துள்ளார் ஆனந்த் கிருஷ்ணன். கடைசியில் அவரது ஆராய்ச்சியே வினையானது. படத்தில், எப்படி செயின் பறிப்பது என்பதை கற்றுத்தரும் விதத்தில் காட்சிகள் உள்ளன என்று சொல்லித்தான் தணிக்கைக்குழு சான்றிதழ் மறுத்தது. வரைமுறையற்ற வன்முறையும் ஒருகாரணம்.
 
இந்நிலையில் படத்தை மறுதணிக்கைக்குழுவுக்கு அனுப்பினர். அவர்கள் படத்தைப் பார்த்துவிட்டு ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். 
 
ஜுன் மாதம் படம் திரைக்கு வருகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

வெப்துனியாவைப் படிக்கவும்