இரண்டு பெண்கள் ஒரே நேரத்தில் ஒரு ஆணை காதலிக்கிறார்கள். இதனால் இருவருக்குள்ளும் போட்டி பொறாமை. ஒருகட்டத்தில் ஒரு பெண் தனது தோழியையும், அவர்கள் காதலித்தவனையும் கொன்று தன்னையும் அழித்துக் கொள்கிறாள். ஆ... என்ன பயங்கரமான கதை?
ரிலாக்ஸ்... கதை இனிதான் ஆரம்பமாகிறது. அப்படி கொலை செய்யப்பட்ட ஆணும், பெண்ணும் வேறொரு இடத்தில் மறுபிறவி எடுக்கிறார்கள். அவர்களை கொலை செய்ய அவர்களை ஏற்கனவே கொலை செய்த பெண் ஆவி உருவில் வருகிறாள். ஆவியிடம் சிக்கும் ஜோடியின் கதை என்ன என்பதுதான் இந்தப் படம்.
ஒரேயிரவில் கதை நடக்கிறது. கதையின் நாயகனாக நடிக்கும் அஸ்கார், மம்முட்டியின் அக்கா பையனாம். ஆள் பார்க்க மம்முட்டியின் மிடுக்குடன் இருக்கிறார். சூரிய கிரண், கௌரி கிருஷ்ணா நாயகிகள்.