40 புது முகங்கள் நடி‌க்கு‌ம் திருந்துடா காதல் திருடா

வியாழன், 8 மே 2014 (15:09 IST)
திருந்துடா காதல் திருடா என்ற வித்தியாசமான தலைப்பில் படப்பிடிப்பு நடந்து வரும் படத்தில்தான் மொத்தம் நாற்பது புது முகங்கள் நடிக்கின்றனர். 
 
தமிழ், மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் வெளிவர இருக்கும் இந்தப் படத்தை ஷபலம் என்ற படத்துக்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் அசோக் ஆர்.நாத் இயக்கி வருகிறார். இங்கிருந்து பிழைப்புக்காக மலேசியா செல்லும் மக்கள், அங்கு என்னென்ன துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லும் படமாக இது இருக்கும். 
 
வெளிநாடு செல்ல நினைக்கும் எல்லோருக்கும் இந்தப் படத்திற்குப் பிறகு ஒரு தயக்கம் கண்டிப்பாக வரும் என்கிறார் இயக்குனர் அசோக். இப்படத்தில் புது முகங்களான ஆதில் இப்ராஹிம் நாயகனாகவும், சுதக்‌ஷனா நாயகியாகவும் நடிக்கின்றனர். பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் எடுக்கப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்