நடிகை ஜெயசித்ரா வீட்டில் 25 கிலோ நகை கொள்ளை

ஞாயிறு, 3 மே 2015 (11:38 IST)
நடிகை ஜெயசித்ரா வீட்டில் மர்ம நபர்களால் 25 கிலோ வெள்ளி நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னனி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஜெயசித்ரா ஆகும். இவர் சென்னையில் உள்ள விருகம்பாக்கம் வீட்டில் தற்போது வசித்து வருகிறார்.
ஜெயசித்ரா கோவில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக 25 கிலோ வெள்ளி நகைகளை தனது நுங்கம்பாக்கம் வீட்டில் வைத்திருந்தார். இந்நிலையில் யாரோ மர்ம நபர்கள் இந்த வெள்ளி நகைகளை கொள்ளை அடித்துள்ளனர்.
 
உடனே இதுகுறித்து காவல் துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு அருகே கண்காணிப்பு கேமரா உள்ளதால் அதில் இருக்கும் காட்சிகளை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்