விஷால் அடுத்தடுத்து செய்யும் நற்பணிகளைப் பார்த்தால் அரசியல் கட்சி தொடங்கி தமிழ்நாட்டு மக்களை கரை சேர்க்காமல் விடமாட்டார் போலிருக்கிறது. மூன்று சக்கர நாற்காலி, தையல் மிஷின் வழங்கியதையே ஒரு தகுதியாக்கி தமிழக முதல்வராக துடிக்கும் விஜயகாந்த் இருக்கும் மாநிலமல்லவா இது.
மாணவர்களின் படிப்புக்கு சூர்யா, லாரன்ஸ் போன்ற சில நடிகர்கள் அறக்கட்டளை மூலம் உதவி வருகிறார்கள். நடிகர் விஷாலும் தனது அம்மா பெயரிலான தேவி அறக்கட்டளை மூலம், பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தும் கல்லூரியில் சேர முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்கள் 16 பேருக்கு பண உதவி செய்ய முன்வந்துள்ளார். இவர்கள் தவிர, நல்ல மதிப்பெண்கள் பெற்றும் பணம் இல்லாமல் படிப்பை தொடர முடியாமல் இருப்பவர்களுக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.