த்ரிஷா, வருண்மணியன் பிரிவு? தீயாய் பரவும் வதந்தி

திங்கள், 27 ஏப்ரல் 2015 (15:35 IST)
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நடிகை த்ரிஷாவும், தயாரிப்பாளர் வருண் மணியனும் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டதாகவும், அவர்களின் திருமணம் ரத்து செய்யப்பட்டதாகவும் இன்று திடீர் வதந்தி பரவியது.
த்ரிஷா - வருண்மணியன் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி மாதம் 23 -ஆம் தேதி இருவீட்டார் முன்னிலையில் சென்னையில் நடந்தது. இன்னும் சில மாதங்களில் இவர்களின் திருமண நடக்கயிருந்த நிலையில் த்ரிஷா, வருண்மணியன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
 
சமீபத்தில் நடந்த வருண்மணியனின் குடும்ப நிகழ்ச்சியில் த்ரிஷா கலந்து கொள்ளவில்லை. அப்போதே லேசாக புகையத் தொடங்கிய இந்தப் பிரச்சனை இப்போது வெளிப்படையான விவாதப் பொருளாகியிருக்கிறது.
 
இந்தப் பிரிவு உண்மையா? உண்மை என்றால் எதனால்? வரும் நாள்களில் இந்தக் கேள்விக்கான விடைகள் தெரிய வரலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்