‌சீமா‌னி‌ன் புதிய அவதாரம்

திங்கள், 20 மே 2013 (15:45 IST)
FILE
இயக்குனராகத் தொடங்கி தம்பி உட்பட சிலபடங்களை இயக்கிய சீமான். பின், நடிகராக, நாம் தமிழர் கட்சியின் தலைவராக அவதாரம் எடுத்தவர், தற்போது தந்தி டிவி-யில் மக்கள் முன்னால்.. எனும் நேரடி விவாத நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

சன் டிவி-யில் அரட்டை அரங்கம், விஜய் டிவி யில் நீயா நானா, ஜெயா டிவியில் மக்கள் அரங்கம் போல், தந்தி டிவி-யிலும் மக்களை தன் வசப்படுத்த ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டதும் முதலில் நினைவுக்கு வந்தவர் சீமான்தானாம்.

ஆரம்பத்தில் மறுத்தவர், அதற்காக கேட்கும் தொகை தருவதாக தந்தியில் சம்மதம் சொல்ல, பின் ஒப்புக்கொண்டார். அதற்கான படப்பிடிப்பு நடத்தப்பட்டு, ஞாயிறு தோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்