மும்பையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. சில பேர் தங்களை சிபிஐ என்று சொல்லிக் கொண்டு சிபிஐ-க்கு இணையாக இன்னொரு போலி சிபிஐ-ஐ நடத்தி வருகிறார்கள். அனைவரும் வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள். ஆபரேஷனின் போது மட்டும் ஒன்று சேர்வார்கள். பெரிய முதலாளிகளின் கணக்கில் வராத பணத்தையெல்லாம் ரெய்டு என்ற பெயரில் அடித்துச் செல்வதுதான் இவர்களின் வேலை.