ஷங்கர் தயாரிப்பில் சிவ கார்த்திகேயன், விஜய் சேதுபதி...?

வெள்ளி, 28 மார்ச் 2014 (15:28 IST)
தொடர்ச்சியாக தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் படங்கள் தயாரித்து வந்த ஷங்கர் ரெட்டச்சுழி, ஆனந்தபுரத்துவீடு போன்ற அட்டர் பிளாப்களால் தயாரிப்பிலிருந்து தற்காலிகமாக தன்னை விடுவித்துக் கொண்டார். என்றாலும் படங்கள் தயாரிக்கும் விருப்பம் அவர் மனதில் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது. ராஜு முருகனின் குக்கூ படத்தை அவர்தான் தயாரித்திருக்க வேண்டும். சில காரணங்களால் அது முடியவில்லை.
ஐ படத்துக்குப் பிறகு மீண்டும் படங்கள் தயாரிக்கும் திட்டம் ஷங்கருக்கு இருக்கிறது. ஐ படத்தின் கதை, வசனத்தில் பங்களிப்பு செலுத்திய இரட்டை எழுத்தாளர்கள் சுபா சொன்ன கதை ஷங்கரை ரொம்பவே கவர்ந்துள்ளது. இரண்டு ஹீரோ சப்ஜெக்டான அதனை தயாரிக்கும் விருப்பம் ஷங்கருக்கு உள்ளது. சிவ கார்த்திகேயன், விஜய் சேதுபதி நடித்தால் நன்றாக இருக்கும் என்பது அவரது அபிப்ராயமாம்.
 
ஐ வெளியான பிறகு இந்த இரண்டு ஹீரோ சப்ஜெக்டை ஷங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கக்கூடும் என்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்