மணிரத்னம் இயக்கிய கடல் படத்துக்குப் பின் கொளதம் கார்த்திக் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சிவம் எனும் மெகா தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் சோனாரிகா நடிக்கிறார். இந்தப் படத்துக்கு, கவிஞர் அறிவுமதியின் மகன் ராசாமதி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
சென்னை மற்றும் கோவாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்திருக்கும் படக் குழுவினர், அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு புதுச்சேரியை தேர்வு செய்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கும் தாணு, வேகமாக படத்தை முடிக்க சொல்லியிருக்கிறார். அதனால், திட்டமிட்டபடி படத்தை முடிக்கவுள்ளார் கலாபிரபு.