கருத்து என்ற பெயரில் அடிக்கடி பாம் வீசுவது குஷ்புவின் வழக்கமாகிவிட்டது. திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வது அப்படியொன்றும் தப்பில்லை என நடத்தைக்கு நியாயம் கற்பித்ததிலிருந்து தொடங்குகிறது குஷ்புவின் கருத்துப் புரட்சி. அதன் பிறகு பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்து கல்லடியும் அதே அளவுக்கு விளம்பரமும் பெற்றுக் கொண்டார். ட்விட்டரில் இணைந்த பிறகு குஷ்புவின் அதகளம் தொடர்கதையாகிவிட்டது.