அனுஷ்கா தெலுங்கில் பாகுபலி, ருத்ரம்மாதேவி ஆகிய படங்களிலும், தமிழில் லிங்காவிலும் நடித்து வருகிறார். இவை மூன்றும் முடிவுறும் நிலையில் உள்ளது. இருந்தும் புதுப்படங்கள் எதிலும் அவர் கமிட்டாகவில்லை.
சமீபத்தில் அவரை சந்தித்த உதவி இயக்குனர் ஒருவர், நாயகியை மையப்படுத்திய கதை ஒன்றை கூறியுள்ளார். கதை அனுஷ்காவுக்கு பிடித்திருந்த போதிலும், அந்த புராஜெக்டை அவர் ஒப்புக் கொள்ளவில்லை. தற்போது நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு அனுஷ்கா திருமணம் செய்து கொள்ளப் போகிறார், அதனால்தான் புதுப்படங்களை அவர் ஒப்புக் கொள்ளவில்லை என ஆந்திரா மீடியா கூறுகிறது.