நான் ஈ படத்துக்குப் பிறகு நல்ல வேடங்களாக தேடிக் கொண்டிருந்தார் சுதீப். கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன கதை பிடித்ததால் அவரது இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் தந்தார். படப்பிடிப்புக்கு கிளம்பும் நேரம் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கே.எஸ்.ரவிக்குமாருக்கு கிடைத்தது. ரஜினியின் உடல்நிலையை மனதில் வைத்து, ரஜினி படத்தை முதலில் முடிக்கிறேன் என்று ரவிக்குமார் சொன்னதை சுதீப்பும் ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் விஜய் படத்தில் நடிக்க சுதீப்பை சந்தித்தார் சிம்புதேவன். வேறு படங்களில் பிஸியாக இருப்பதால் முதலில் வாய்ப்பை ஏற்கவில்லை சுதீப். ஆனால் இத்தனை நாட்களுக்குப் பிறகும் சுதீப்புக்குப் பதில் வேறொரு நடிகரை சிம்புதேவன் தேடிப் போகவில்லை. தவிர சுதீப்புக்கு சிம்புதேவன் உருவாக்கியிருந்த கதாபாத்திரம் வில்லன் கிடையாது.