விஜய்யின் கத்தி படத்தின் தயாரிப்பில் பங்குபெற்றிருக்கும் லைகா நிறுவனம் ராஜபக்சேக்கு இணக்கமான நபர்களுடையது என்றும், அவர்களின் தொழில்கூட்டணி ஏற்கனவே ஈழத்தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை சம்பாதித்திருக்கும் வேளையில் விஜய் லைகா தயாரிக்கும் கத்தியில் நடிப்பது பிரச்சனைகளை உருவாக்கலாம் எனவும் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில் கூறியிருந்தது போல் கத்திக்கு எதிரான விமர்சனங்கள் நாள்தோறும் வலுத்து வருகிறது.
கத்தி படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று வெளிநாடுவாழ் தமிழர்கள் பலரும் அழைப்பு விடுத்து வருகின்றனர். இணையதளங்களில் கத்திக்கும், லைகாவுக்கும் எதிராக எழுதப்படுகின்றன. தமிழகத்திலும் இந்த எதிர்ப்பலை உருவாக சாத்தியமுள்ளது.