முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தியை ஐங்கரனும், லைகா புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரிக்கின்றன. இருவரில் லைகா புரொடக்ஷன்ஸ்தான் படத்தில் அதிக முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. லைகா நிறுவனம் பல்வேறு துறைகளில் முதலீடு செய்திருப்பதுடன் பல தொழில்களையும் பல்வேறு நாடுகளில் செய்து வருகிறது. இது இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு நெருக்கமான நிறுவனம். ராஜபக்சேயின் நெருங்கிய உறவினர்கள் பலரும் லைகாவுடன் இணைந்து வர்த்தகம் செய்துள்ளனர்.
இந்த விவரங்கள் இணையதளங்களில் ஆதாரத்துடன் வெளியிடப்பட்டது. ஐங்கரன் கருணாகரனும், லைகா நிறுவனரும் இலங்கை சென்ற போது இலங்கை ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரைதான் பயன்படுத்தினர். அவர்களை வரவேற்றவர்கள் இலங்கை அரசில் அங்கம் வகிப்பவர்களும் ராணுவ அதிகாரிகளும்.