பெண்கள் மத்தியில் விஜய்க்கு பெயர் வாங்கித் தந்த படங்களில் முக்கியமானவை நினைத்தேன் வந்தாய், ப்ரியமானவளே. இந்தப் படங்களை இயக்கியவர் செல்வபாரதி. அவரின் இயக்கத்தில் நடிப்பதை விஜய் பெரிதும் விரும்பினார். காமெடியுடன் காதல், சென்டிமெண்டை கலந்து தருவதில் செல்வபாரதி கைதேர்ந்தவர்.
முருகதாஸ், சிம்புதேவன், சசிகுமார் என்று பிஸியாகப் போய்க் கொண்டிருக்கும் விஜய்யின் சினிமா கரியரில் செல்வபாரதிக்கு இப்போதைக்கு இடம் கிடைக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.