வாய்ப்புக்கு காத்திருக்கும் நடிகை

புதன், 21 மே 2014 (12:31 IST)
திரைப்படங்களில் சரியாக வாய்ப்புகள் அமையாத காலகட்டத்திலேயே தன்னை காதலித்த ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானவர் நடிகை அபிராமி. 
 
சில ஆண்டுகள் இல்லற வாழ்க்கை, அதன்பின் அமெரிக்காவிலுள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் மார்க்கெட்டிங் டைரக்டர். இப்படி சில ஆண்டுகள் ஓடிய பின்னால், மீண்டும் நடிக்க வேண்டும் என்று ஆர்வம் எழுந்திருக்கிறது. 
 
ஏற்கனவே கமலுக்கு ஜோடியாக ‘விருமாண்டி’ படத்தில் நடித்திருந்த நட்பின் காரணமாக ‘விஸ்வரூபம்’ படத்தில் நடிக்க கமல் கூப்பிடுவார் என்று நம்பிக் காத்திருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 
 
அத்தோடு அடிக்கடி அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்து தெரிந்த பல இயக்குனர்களை அணுகி வாய்ப்பும் கேட்டுப் பார்த்தார். எதுவும் அமையவில்லை இதனால் மனம் வெறுத்துப் போன அபிராமி ’இனிமேல் சுற்றிப் பார்க்கக் கூட சென்னை பக்கம் வரமாட்டேன்’ என்று தனது தோழிகளிடம் சொல்லி 
புலம்பி வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்