வாடா டேய் எம்புருசா...

வெள்ளி, 2 மே 2014 (13:05 IST)
மயலு, ஞாபகங்கள் ஆகிய படங்களை இயக்கிய எம்.ஜீவன் அடுத்து இயக்கியிருக்கும் படம் மொசக்குட்டி. படத்தின் பெயரிலேயே சின்னதாக கசமுசா தெரியும் இந்தப் படத்துக்கு இசை ரமேஷ் விநாயகம்.
வீரா என்ற நடிகர் மொசக்குட்டியில் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோ‌டி மகிமா. அவர்களுடன் பசுபதி, மதுமிதா, யார் கண்ணன், சிசர் மனோகர், எம்.எஸ்.பாஸ்கர், ஜோ‌மல்லூரி உள்பட பலர் நடிக்கின்றனர்.
 
இந்தப் படத்துக்காக எழுதப்பட்ட பாடல்தான், வாடா டேய் எம்புருசா நான் தாரேன் புதுப்பரிசா ஓம் போல பேரழகா பத்து பத்தா பெத்து தாரேண்டா...
இந்த கவித்துவமான பாடலை பாட வந்திருக்கிறார் பாடகி சின்மயி. பாடல் வரிகளைப் பார்த்த அவருக்கு ஷாக். விரைவில் திருமணம் நடக்கயிருக்கும் நிலையில் புருசனை வாடா போடா என்றால் நன்றாகவா இருக்கும்?
 
பாடலைப்பாட அவர் தயங்க, இயக்குனர் ஜீவனும், இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகமும் மொத்த பாடலையும் அவரிடம் தந்து அதன் கவித்துவ மேன்மையை எடுத்துச் சொல்ல, சின்மயியும் தயக்கம் விலகி வாடா டேய் புருசா பாடலை பாடித் தந்தார்.
 
பாடல் செம பிட்டாகும் சே... ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் இயக்குனரும், இசையமைப்பாளரும்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்