வருகிறது போக்கிரி கூட்டணி

செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (12:03 IST)
பிரபுதேவா இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிக்கயிருப்பதாக செய்தி கசிந்துள்ளது.
 
தமிழில் பிரபுதேவா இயக்கிய போக்கிரி 2007 -இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை தந்தது. இந்தப் படத்தை வான்டட் என்ற பெயரில் சல்மான் கானை வைத்து இந்தியில் இயக்கி இந்திப்பட இயக்குனரானார் பிரபுதேவா. படம் அங்கு பம்பர் ஹிட்.
2009 -இல் மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் வில்லு படத்தில் விஜய் நடித்தார். இந்தமுறை படம் தோல்வி. ஆனாலும் பிரபுதேவா மீதான விஜய்யின் மரியாதை அப்படியே இருந்தது. அவர் அக்ஷய் குமாரை வைத்து இந்தியில் ரவுடி ரத்தோரை இயக்கிய போது, நட்புக்காக அந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சியில் அக்ஷய்யுடன் இணைந்து நடனமாடினார்.
 
விரைவில் பிரபுதேவா மீண்டும் விஜய்யை இயக்குவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியில் அஜய்தேவ் கான் நடிக்கும் ஆக்ஷன் ஜாக்சன், சிங் இஸ் பிளிங், ஏக்தா கபூர் தயாரிப்பில் ஒரு படம் என்று பிஸியாக இருக்கிறார் பிரபுதேவா. எப்போது அவர் விஜய் படத்தை இயக்குவார் என்பது சிம்புதேவன் படம் முடிந்ததும் தெரியவரும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்