வந்தார் சமந்தா

சனி, 18 ஆகஸ்ட் 2012 (12:30 IST)
தோல் பிரச்சனை இனி அவர் நடிக்க மாட்டார் அதிக ஒளி உடம்பில் பட்டால் தோல் அல‌ர்‌ஜி அதிகமாகிவிடும் என்றெல்லாம் கூறப்பட்ட சமந்தா மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

இந்த அலர்‌ஜி காரணமாக ஏற்கனவே ஒப்பந்தமான கட‌ல், ஐ படங்களிலிருந்து சமந்தா விலகினார். நீதானே என் பொன்வசந்தம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ளவில்லை. அதேநேரம் நான்கு தெலுங்குப் படங்களில் சமந்தா நடிக்கிறார். இதில் ஒரு படம் நீதானே என் பொன்வசந்தத்தின் தெலுங்குப் பதிப்பு. இதில் நானி ஹீரோ.

தெலுங்கில் இவர் மகேஷ்பாபு, வெங்கடே‌ஷ், சித்தார்த் ஆகியோருடன் தலா ஒரு படம் நடிக்கிறார். இடையில் நீதானே என் பொன்வசந்தத்தின் பேட்ச்வொர்க்கில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

சமந்தாவின் ‌ரிட்டர்ன் நான்கு தயா‌ரிப்பாளர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்