வடிவேலு‌வின் ‌ரீ எ‌ண்ட்‌ரி

புதன், 8 பிப்ரவரி 2012 (15:48 IST)
அவுக நடிக்க கூப்பிட்டாக, இவுக நடிக்க கூப்பிட்டாக என்று வடிவேலு பற்றி வரும் எந்த‌த் தகவலிலும் உண்மையில்லை. தனது ‌ரீ எ‌ண்ன்ட்‌ரியை டிஃ‌பரண்டாக திங்க் பண்ணியிருக்கிறார் அரசியல் சூறாவளியில் சிக்கிய இந்த காமெடிப் புயல்.

இந்திரலோகத்தில் அழகப்பன் பாக்ஸ் ஆஃபிஸில் தரை தட்டினாலும் ஹீரோ ஆசை இந்த‌க் காமெடியனுக்குள் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. தனது ‌ரீ எ‌ண்ட்‌ரி ஹ‌ீரோவாக இருக்க வேண்டும் என்பதில் வைராக்கியமே இருக்கிறது இவருக்கு.

இவ்வளவு பிரச்சனைகளுக்குப் பிறகு காமெடியனாக ஒரு படத்தில் தோன்றுவதைவிட ஹீரோவாக அடி பின்னலாம் என்ற கணக்கில் ஒரு கதையை ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கிறார். அரசியல் வானம் தெ‌ளிந்த பிறகு சமாதானக் கொடியுடன் படப்பிடிப்பை தொடங்குவதாக திட்டம்.

விரைவில் சமாதான உடன்படிக்கையுடன் வடிவேலு ஹீரோ வேஷம் கட்டுவதை காணலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்