ரஜினிகாந்த் பூரண நலம் பெற்று பழைய நிலைக்கு திரும்பியிருக்கிறார். சிவாஜி, எந்திரன் போன்று ராணாவிலும் ரிஸ்க் எடுத்து ஆக்சன் காட்சிகளில் நடிக்க அவர் தயார். ஆனால் அவரது குடும்பமும், நண்பர்களும் அதற்குத் தடை விதித்திருக்கிறார்கள்.
இதன் காரணமாக ராணாவின் ஸ்கிரிப்டில் சிறிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. ரிஸ்க்கான காட்சிகள் பலவும் ரஜினியின் இன்றைய உடல்நிலைக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளன.
அக்டோபர் 3 முதல் ராணா படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது.