ராணாவுடன் ஜோ‌டியாக திருமணத்துக்கு வந்த த்ரிஷா

புதன், 20 ஆகஸ்ட் 2014 (15:54 IST)
த்ரிஷாவும், ராணாவும் காதலிப்பதாக தமிழகம், ஆந்திராவில் நெடுங்காலமாக வதந்தி நிலவி வருகிறது. அதற்கு உரம் சேர்ப்பது போல் அடிக்கடி பொது இடங்களில் இருவரும் ஒன்றாக வந்து வதந்தி தீயை கிளறிவிடுவதுண்டு. நேற்று முன்தினமும் அதுதான் நடந்தது.
ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் பிரபல தெலுங்கு இயக்குனர் ராகவேந்திர ராவின் மகனின் திருமணம் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சிக்கு த்ரிஷாவும், ராணாவும் ஜோ‌டியாக வந்தனர். ராணா கோட் அணிந்திருக்க, சேலையில் அவருடன் தம்பதி போலவே வந்திறங்கினார் த்ரிஷா. 
 
இவர்கள் வந்ததும் மணமக்களின் மீதிருந்த அனைவரின் பார்வையும் இவர்கள் பக்கம் திரும்பியது. ஆனால் அதுபற்றி த்ரிஷா கவலைப்பட்டதாக தெரியவில்லை.
 
இதற்குப் பிறகும், நாங்க வெறும் நண்பர்கள் மட்டுமே என்றுதான் த்ரிஷா சொல்லப் போகிறார். நாமும் கேட்டு வைப்போம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்