மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தை சந்தித்த விஜய்

திங்கள், 26 மே 2014 (17:48 IST)
கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் கொல்லப்பட்டார். அவருக்கு இந்து என்ற மனைவியும் அர்ஷயா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
என் மகன் தேசத்துக்காக வீரமரணம் அடைந்துள்ளான். அவனது இறப்புக்கு நான் கண்ணீர் சிந்த மாட்டேன், அதனை அவன் விரும்ப மாட்டான் என்று முகுந்த் வரதராஜனின் தந்தை கூறியது அனைவரையும் கலங்க வைத்தது. 
 
முகுந்த் வரதராஜனின் இறுதிச் சடங்கில் அனைவரையும் கண் கலங்க வைத்தது அவரது மகள் அர்ஷயா. தந்தையின் இறப்பு குறித்து எதுவும் அறியாத அந்த பிஞ்சு குழந்தை தந்தையின் சடலத்துக்கு கை அசைத்து விடை தந்த காட்சி கல் மனதையும் உருக்குவதாக இருந்தது.
 
தலைவனை இழந்த அந்த குடும்பத்தை நே‌ரில் சென்று சந்தித்துள்ளார் நடிகர் விஜய். முகுந்தின் மகள் அர்ஷதாவுக்கு பிடித்த நடிகர் விஜய்தானாம். அதனை கேள்விப்பட்ட விஜய் நே‌ரில் சென்று முகுந்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு அர்ஷிதாவிடம் சிறிது நேரத்தை செலவிட்டுள்ளார். பிடித்த நடிகரை நே‌ரில் பார்த்ததில் அந்த குழந்தைக்கும் மகிழ்ச்சி.
 
நடிகர்கள் உண்மையான என்டர்டெயினராவது இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில்தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்