மீண்டும் நடிக்க இரண்டு நாள் அவகாசம் கேட்ட ஜோ‌திகா

சனி, 23 ஆகஸ்ட் 2014 (11:44 IST)
திருமணத்துக்குப் பிறகு நடிக்காமலிருந்த ஜோ‌திகா மலையாளத்தில் வெளியான ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் தமிழ் ரீமேக் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார். மீண்டும் நடிப்பதா கூடாதா என்பதை தீர்மானிக்க அவர் இரண்டு நாள்கள் அவகாசம் எடுத்துக் கொண்டதாக சூர்யா கூறினார்.
ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தை சூர்யாவும், ஜோ‌திகாவும் சேர்ந்து பார்த்துள்ளனர். 
படம் பிடித்துப் போகவே அதனை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்க விரும்பியுள்ளார் சூர்யா. ஜோ‌திகா நடிப்பதாக இருந்தால் வாங்கலாம் என்ற எண்ணத்தில் ஜோ‌திகாவிடம் கேட்டுள்ளார். மீண்டும் நடிப்பது குறித்து முடிவு செய்ய இரண்டு நாள்கள் அவகாசம் கேட்டுள்ளார் ஜோ‌திகா.
 
இரண்டு தினங்களுக்குப் பிறகு அவர் நடிக்க ஓகே சொல்ல உடனடியாக ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் தமிழ் ரீமேக் உரிமை வாங்கப்பட்டது. தனது டி2 என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் இந்தப் படத்தை சூர்யா தயாரிக்கிறார்.
 
இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்