கடல் படத்துக்குப் பிறகு மணிரத்னம் எந்த மொழியில் யாரை வைத்து படம் செய்வார் என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்தியில் அவர் படம் இயக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் தெலுங்கில் நாகார்ஜுன், மகேஷ்பாபு ஆகியோரை வைத்து படம் செய்வதாக தகவல் வெளியானது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் இதனை உறுதி செய்யாததால் இந்தத் தகவலையொட்டி வதந்திகள் பல பரவின.
இந்நிலையில் கேரளாவில் பேட்டியளித்த சுஹாசினி, நாகார்ஜுன், மகேஷ்பாபு இருவரும் படத்தில் நடிப்பதை உறுதி செய்தார். முதல்முறையாக நாகார்ஜுனும் மணிரத்னம் படத்தில் நடிப்பது குறித்து பேசியுள்ளார்.