மஞ்சப்பை படத்தை ராஜ்கிரணை முன்னிறுத்தி விளம்பரம் செய்கிறார்கள். தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் விளம்பரங்களிலும் அவரே பிரதான இடத்தைப் பிடித்துக் கொள்ள ஹீரோ விமல் ஓரமாக வருகிறார். சரி, ஹீரோயின் லட்சுமி மேனன்...?
ராஜ்கிரணுக்கு இப்போதும் ரசிகர்கள் மத்தியில் ஈர்ப்பு உள்ளது. மஞ்சப்பை கதையும் தாத்தா, பேரனை மையப்படுத்தியது. முக்கியமாக தாத்தா ராஜ்கிரணை. அதனால் அவருக்கு முக்கியத்துவம் தந்து ரசிகர்களை திரையரங்குக்கு இழுக்கிறார்கள். ஆனால் விளம்பரங்களில் தன்னை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கிறார்கள் என கோபத்தில் இருக்கிறார் லட்சுமி மேனன். அவர் அப்படி நினைக்க காரணம் இருக்கிறது.
படிக்கப் போறேன், பரீட்சை எழுதப் போறேன் என்று மஞ்சப்பை விளம்பர நிகழ்ச்சிகளில் லட்சுமி மேனன் கலந்து கொள்ளவில்லையாம். அதனை மனதில் வைத்தே விளம்பரங்களில் இருட்டடிப்பு செய்கிறார்கள் என்று நினைக்கிறார் லட்சுமி மேனன்.