சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தனது காதலை குறித்து மனம் திறந்தார் பிரேம்ஜி.
என்னதான் விளையாட்டு பிள்ளையாக இருந்தாலும் காதல் அப்படியொன்றும் விளையாட்டுத்தனமாக யாரையும் கடந்துவிடாது. பிரேம்ஜிக்கும் ஒரு மானசீக காதல் உள்ளது. அந்த காதலியை நினைத்து என்னமோ நடக்குது படத்தில் ஒரு காதல் பாடலையும் ஒலிப்பதிவு செய்தார். ஒரு கண்ணை சாய்ச்சு நீ... என்று தொடங்கும் அந்தப் பாடலை தனது காதலியை மனதில் வைத்து கம்போஸ் செய்தாராம்.