மக்கள் சேவையில் இறங்கும் சிம்பு

சனி, 16 ஆகஸ்ட் 2014 (15:42 IST)
இரண்டு காதல் தோல்விகள் சிம்புவை பக்குவப்படுத்தியுள்ளது. அவருக்குள் ஏற்பட்டிருக்கும் ஆன்மீக மாற்றங்கள் அவரை வேறு திசைகளில் யோசிக்க வைத்துள்ளது. 
எனக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் தந்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நண்பர்களிடமும், நெருக்கமானவர்களிடமும் கூறி வருகிறார் சிம்பு. தமிழக மக்களுக்கு நல்லது செய்யப் போகிறேன் என்று ஏதாவது நடிகர், நடிகை சொன்னால் தமிழர்களின் அடிவயிற்றில் தீப்பிடிக்கும். தமிழக மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்றால் சம்பந்தப்பட்டவருக்கு அரசியல் ஆசை வந்திருக்கிறது என்று அர்த்தம்.
 
ஆனால் சிம்பு விஷயத்தில் பயப்பட வேண்டியதில்லை. அரசியல் எனக்குப் பிடிக்காது. நல்லது செய்ய அரசியலுக்கு வரவேண்டும் என்றில்லை. பணம் இருந்தால் போதும். மக்கள் சேவையை தொடங்கிவிடலாம். நான் தொடங்கப் போகிறேன் என்று கூறியுள்ளார்.
 
மக்கள் சேவைக்கு பணத்தைவிட முக்கியமானது, மனம். அது சிம்புவிடம் இருக்கிறது. 
 
சீக்கிரம் தொடங்குங்கள் பிரதர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்