சண்முக பாண்டியனுக்கு சின்ன வயதிலேயே நடிப்பில் ஆர்வம். தனக்கு கலையுலக வாரிசு ஒருவர் இருக்க வேண்டும் என்ற விஜயகாந்தின் விருப்பத்துக்கு ஏற்ப சினிமா ஆசையுடன் வளர்ந்தார் சண்முக பாண்டியன். அவருக்காக கதை கேட்கும் படலம் கடந்த சில ஆண்டுகளாக நடந்தது. கடைசியில் சகாப்தம் என்ற ஸ்கிரிப்டை ஓகே செய்தார் விஜயகாந்த். சந்தோஷ் என்பவர் படத்தை இயக்க கடந்த டிசம்பரில் படத்துக்கு பூஜை போட்டனர்.