பூரண நலத்துடன் வீடு திரும்பினார் மனோரமா

புதன், 9 ஏப்ரல் 2014 (11:44 IST)
நடிகை மனோரமா திடீர் நெஞ்சுவலி மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 30 -ஆம் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
 
மனோரமாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அதன் பிறகும் இரண்டு தினங்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
பூரண நலமடைந்ததை அடுத்து அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு சில தினங்கள் முன்பு பேராண்டி படத்துக்காக அவர் ஒரு பாடல் பாடியது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்