நாட்டுப் பிரச்சனையை எடுத்துக் கொண்டாலும் ஹரியின் குடும்ப அஸ்திவாரத்தில் எந்த சேதாரமும் இல்லை. அதே குடும்பம், அதே காதல், அதே வில்லன் எல்லாமும் பூஜையிலும் இருக்கிறது.
படத்தைப் பற்றி கூறியவர், முக்கோண காதல் கதை மாதிரி இது முக்கோண ஆக்சன் கதை. கோயம்புத்தூரில் ஆரம்பிக்கிற கதை பீகாரில் முடியும் என்றார். ஹரி படங்களில் வரும் காதல் பவித்திரமானதாக இருக்கும். காதலி சர்வநிச்சயமாக ஆச்சாரமானவளாகவே இருப்பாள். மாறாக இந்தப் படத்தில் கொஞ்சம் மாடர்னான காதலி. அதற்கு ஸ்ருதி பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.