விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், ஆர்யா நடிக்கும் படத்தின் பூஜை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் புதிதாக கட்டியிருக்கும் விஸ்வரூப ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா மந்திரில் நடந்தது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஏ.எம்.ரத்னம் மேற்பார்வையில் ஸ்ரீசத்ய சாய் மூவிஸ்ரகுராம் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு மே 30 தொடங்கும் என கூறப்பட்டது. ஆனால் நாளையே இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்குகிறது. அதற்குமுன் சம்பிரதாயமான பூஜை போடப்பட்டது. இதில் அஜீத், ஆர்யா, ஏ.எம்.ரத்னம், ரகுராம், விஷ்ணுவர்தன், அவரது மனைவி காஸ்ட்யூம் டிஸைனர் அனுவர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாளை மும்பையில் தொடங்கும் படப்பிடிப்பில் அஜீத், ஆர்யாவுடன் நயன்தாராவும், தாப்ஸீயும் கலந்து கொள்கிறார்கள்.