இந்த நடைமுறையின் வெளிச்சத்தில், ஈழம் குறித்து படம் எடுக்காமல் இருப்பதே சிறந்தது என்று பலரும் கூறிவருவது ஏற்கக் கூடியதே. சீமானும் இதனை பலமுறை வலியுறுத்தியுள்ளார். ஆனால் ஈழத்தை முதலீடாக கருதுகிறவர்கள் அதற்கு செவிமடுத்தால்தானே.
பிரவீண் காந்தின் புலிப்பார்வையும் எதையும் சாதிக்கப் போவதில்லை. பிரபாகரனின் மகனின் கடைசி நிமிடங்கள் தமிழர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை காசாக்கும் முயற்சியாகவே அது உள்ளது. படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பிரபாகரனின் மகனைப் போலவே படத்தில் நடித்த சிறுவனையும் அலங்கரித்து மேடையில் அமர்த்தியிருந்தனர். இந்த நாடகங்கள்தான் சகிக்க முடியாதவை.