காமராஜரின் வாழ்க்கை ஒன்றும் சீஸனல் வியாபாரம் கிடையாதே. 2004-ல் வெளியான படத்தை மீண்டும் மெருகேற்றி வெளியிடும் முயற்சியில் பாலகிருஷ்ணன் இறங்கியிருக்கிறார். காமராஜர் குறித்த கூடுதலான சம்பவங்களை படத்தில் இணைக்கும் திட்டமும் உள்ளது. முக்கியமாக இயக்குனர் சமுத்திரகனி தியாகியின் பேரனாக நடிக்கும் காட்சிகளை விரைவில் படமாக்கி படத்தில் சேர்க்க உள்ளனர்.