புகார் கொடுத்த அசின்

புதன், 21 மே 2014 (12:08 IST)
பல நல்ல விசயங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட வலைதளத்தில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக நடிகர், நடிகைகள் பெயரில் போலியான முகவரியில் சிலர் சுய லாபத்துக்காக குற்ற செயல்களில் ஈடுபடுவதாக காவல் நிலையத்துக்கு ஏகப்பட்ட புகார்கள் வந்தபடி இருக்கிறது. 
தற்போது தனது பெயரிலும் பேஸ்புக், டுவிட்டரில் மோசடி நடைபெற்று வருவதாக நடிகை அசின் புகார் 
கொடுத்துள்ளார். 
 
’இதுவரை நான் எந்த விதமான வலைதளங்களிலும் கணக்கு வைத்துக் கொண்டதில்லை. ஆனால், யாரோ சில விஷமிகள் எனது பெயரில் போலியான கணக்கு ஆரம்பித்து நான் உரையாடுவது போல தமிழ் மற்றும் இந்தி நடிகர், நடிகைகளிடம் உரையாடி இருக்கிறார்கள். இந்த தகவல் கிடைத்ததும் மிகவும் அதிச்சி அடைந்தேன்’ என்கிறார் அசின்.

இது குறித்து புகாரும் கொடுத்திருக்கிறார். மேலும், இது போன்ற மோசடிகளை எனது ரசிகர்கள் 
நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்