பில்லா 2 வுக்குப் பிறகு பார்வதி ஓமனக்குட்டனுக்கு எந்த வாய்ப்பும் அமையவில்லை. வடிவேலுவின் தெனாலிராமன் படத்துக்கு அவரைதான் முதலில் ஹீரோயினாக கேட்டனர். நடிக்க தயாராக இருந்தவர் சுற்றமும் நட்பும் சொன்ன அறிவுரையால் நடிக்க மறுத்தார். ஏறக்குறைய அவரது சினிமா கரியர் காலாவதியாக இருந்த நேரம் பீட்சா ரீமேக் வாய்ப்பு தேடி வந்துள்ளது.