ஆஷிக் அபுவின் புதிய படம், வலது வஸத்தே கள்ளன். வலதுபுற திருடன் என்று இதற்கு பொருள். ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது அவருக்கு இருபுறமும் இரு திருடர்கள் சிலுவையில் அறையப்பட்டனர். அதில் அவரின் வலதுபுறத்தில் அறையப்பட்ட திருடன் நல்லவன், கடவுளை நம்புகிறவன்.
ஆனால் இது ஆன்மீகம் சம்பந்தப்பட்ட படம் கிடையாது, கேரள கிராமம் ஒன்றில் உள்ள ஒரு குடும்பத்தின் கதை என படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார். அதேநேரம் படத்தின் நாயகன் பிருத்விராஜ் பாதிரியாராக வருகிறார். சாதாரண கதையிலேயே அசாதாரணமான சம்பவங்கள் வைக்கும் ஆஷிக் அபு இந்த கிறிஸ்தவ பின்னணி கதையில் என்ன மாதிரியான கண்ணி வெடிகள் வைக்கப் போகிறார் என்பதை அறிய கேரளாவே ஆவல் கொண்டுள்ளது.