நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தை எடுத்து வருகிறார். ஆர்யா, அமலா பால், தாப்ஸி, விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் ஆறு புதுமுக நடிகர்களும் அறிமுகமாகிறார்கள்.
சமீபத்திய பார்த்திபன் அதிரடி, படத்தின் முதல் பாதியை மட்டும் பார்த்துவிட்டு இரண்டாவது பாதியை யூகித்து சரியாக கூறினால் ஒரு கோடி ரூபாய் பரிசளிக்கப்படும். முதல் பாதியில் சொல்லப்படும் கதையை வைத்துதான் இரண்டாவது பகுதியில் என்ன வரும் என்பதை யூகிக்க முடியும். ஆனால் முதல் பாதியில்தான் கதையே கிடையாதே என்று சவாலுடன் ஒரு அதிர்ச்சி குண்டையும் வீசுகிறார் பார்த்திபன்.