பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி மரண‌ம்

திங்கள், 20 பிப்ரவரி 2012 (13:46 IST)
தமிழின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவரான எஸ்.என்.லட்சுமி மரணமடை‌ந்தா‌ர்.

தமிழின் சிறந்த நடிகைகளின் பட்டியலைத் தயா‌ரித்தால் முதல் பத்துக்குள் இடம் பிடிப்பார் எஸ்.என்.லட்சுமி. மூன்று தலைமுறை ரசிகர்களை தனது நடிப்பா‌ஈர்த்த மகத்தான நடிகை இவர். வயதானர்களுக்கு சர்வர் சுந்தரம், துலாபாரம் முதலியன இவர் நடித்தப் படங்களில் மறக்க முடியாதவை. அதேபோல் இளம் வயதினருக்கு மைக்கேல் மதன காமராஜன், மகாநதி, விருமாண்டி என கமலின் பல படங்கள். இன்றைய இல்லத்தரசிகளுக்கு பல தொலைக்காட்சி தொடர்கள்.

நகைச்சுவை, குணச்சித்திரம், ஆக்ரோஷ சண்டைக் காட்சிகள் என அனைத்திலும் அனாயசமாக நடித்த இவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் வழுக்கி விழுந்த இவருக்கு முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார்.

நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர் என்.எஸ்.லட்சுமி. என்.எஸ்.கே. எம்‌ஜிஆர், சிவா‌ஜி என தமிழின் முக்கிய நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ள இவர் நடிப்பு மீதிருந்த காதலால் திருமணம் செய்து கொள்ளவில்லை. நாளை இவரது இறுதிச் சடங்கு சொ‌ந்த ஊரான ‌விருதுநக‌ரி‌ல் நடக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்