படம் இயக்கும் முயற்சியில் தயாரிப்பாளர்

பிடிச்சிருக்கு படத்தை தயாரித்தவர் கூல் புரொடக்ஷன்ஸ் சித. செண்பகக் குமார். தற்போது மகேஷ் சரண்யா மற்றும் பலர் படத்தை தயாரித்து வருகிறார்.

மலையாளத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக, லால்ஜோஸ் இயக்கும் மழைவரப் போகுது படத்தையும் இவரது கூல் புரொடக்ஷனே தயாரிக்கிறது.

கிராமத்து தண்ணீர் பிரச்சனையும், அங்குள்ள மனிதர்களின் சினிமா மோகமும்தான் படத்தின் கதையாம்.

சித. செண்பக குமாருக்கும் சினிமா மீது மோகம். இது தயாரிப்புடன் நிற்காமல் இயக்கும் நோக்கியும் வழிந்தோடுகிறது. ஆம், விரைவில் படம் ஒன்றை இயக்கப் போகிறாராம்.

வெற்றிகரமான தயாரிப்பாளருக்கு இயக்கத்திலும் வெற்றி தொடர அட்வான்ஸ் வாழ்த்துகள்.

வெப்துனியாவைப் படிக்கவும்