படம் இயக்கும் பீட்சா, சூது கவ்வும் தயாரிப்பாளர்

வியாழன், 24 ஏப்ரல் 2014 (16:13 IST)
தமிழ் சினிமாவில் சத்தமில்லாமல் புதுப்பாதை போட்டவர் திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் சி.வி.குமார்.

அட்டக்கத்தி படத்தின் மூலம் தயாரிப்பாளராக சினிமாவுக்குள் நுழைந்த இவர் பீட்சா, சூது கவ்வும், பீட்சா 2 வில்லா, தெகிடி படங்களின் மூலம் முகம் தெ‌ரியாத நடிகரையும் ஹீரோவாக வைத்து படம் தயாரிக்கலாம், கதையும், திரைக்கதையுமே பிரதானம் என்ற வெற்றி சூத்திரத்தை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தார். தற்போது இவரது தயாரிப்பில் முண்டாசுப்பட்டி, லூசியா படங்கள் தயாராகி வருகின்றன.
 
எந்த திரைக்கதை ஜெயிக்கும் என்பதை சரியாக கணிப்பதுதான் சி.வி.குமாரின் வெற்றியின் அடிப்படை. இதுவரை தயாரிப்பாளராக இருந்த அவர் படம் இயக்கப் போகிறார்.
 
இந்தப் படமும் குறைந்த பட்ஜெட்டில் ஹீரோயிசம் தவிர்த்த நல்ல படமாக இருக்கும் என்று உறுதியாக நம்பலாம்.
 
தமிழ் சினிமாவின் முகத்தை புதுப்பித்த சி.வி.குமார் இயக்குனராகவும் வெற்றிபெற நமது வாழ்த்துகள்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்