அப்படி பேசப்படுவது, இவர்கள் நடிப்பு பற்றியோ, வாங்கும் சம்பளம் பற்றியோ அல்ல. எல்லாம் சிம்புவோடு வைத்துக் கொண்ட காதல் விவகாரம்தான்.
‘இது நம்ப ஆளு’ படத்தில் சிம்புவுடன் மீண்டும் நயன்தாரா சேர்ந்து நடித்து வருகிறார். அதனால், முன்பு போலவே இருவரும் சகஜமாக பழகி வருகிறார்கள். மறுபடியும் இருவரும் காதலிக்கிறர்கள் என்று யாரோ ஹன்சிகாவிடம் போட்டுக் கொடுக்க, சிம்புவுடனான காதல் முறிந்திருந்த நிலையிலும், நயன்-ஹன்சி சண்டை ஆரம்பமானது.
தற்போது ஒரு பெரிய நிறுவன திரைப்படத்தில் ஹன்சிகா நடிப்பதாக இருந்தது. ஒப்பந்தமாகும் நேரத்தில்.. அந்த படத்தில் அவர் இல்லை என்று தகவல் வர, அதற்கு நயன்தாராதான் காரணம் என்று வெளிப்படையாகவே பேட்டி கொடுக்க ஆரம்பித்து விட்டார். ‘நீ என்ன என்னைவிட அழகா..?. ’யாருக்கு ரசிகர்கள் அதிகம் பார்க்கலாமா..?’ என்கிற அளவுக்கு சண்டை முற்றிக் கிடக்கிறது.