கேரளாவில் சாதியை தங்கள் பெயருடன் சேர்த்துக் கொள்வது சாதாரணமாகப் பார்க்கக் கூடியது. நடிகர், நடிகைகள் சிலரும் தங்களின் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை பட்டம் போல் சேர்த்து கொண்டிருக்கிறார்கள். நவ்யா நாயர், அனூப் மேனன்... இப்படி.
அவன் இவன் படத்துக்குப் பிறகு ஜனனி அய்யர் நடித்தப் படங்களில் தெகிடிதான் ஓரளவும் வசூலும், பெயரும் சம்பாதித்து தந்தது. அந்த அதிர்ஷ்டம் அப்படியே தொடரும் ஆசையில் தெகிடி டைட்டிலில் இடம் பெற்ற அய்யர் இல்லாத ஜனனியை இனி தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று தீர்மானித்துள்ளார். இனி ஜனனி அய்யரை ஜனனி என்றே எழுதவும். படங்களிலும் அப்படியே அவரது பெயர் இடம்பெறும்.