நான் அப்படி சொல்லலை - ஆடிப்போன சுதீப்

செவ்வாய், 13 மே 2014 (19:44 IST)
ரஜினி படத்தில் நடிக்க மாட்டேன் என்று நான் சொல்லவேயில்லை என தனது ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார் சுதீப்.
 
மீடியாக்கள் பெரிய நபர்களுடன் தேவையில்லாமல் கோர்த்துவிடும் போது ஐயோ, அப்படியெல்லாம் நான் சொல்லவேயில்லை என விளக்கம் தரும் பரிதாப நிலை சிலருக்கு ஏற்படும். அப்படி மீடியாக்களின் கிசுகிசுக்களில் சமீபமாக மாட்டியவர் நடிகர் சுதீப்.
 
கே.எஸ்.ரவிக்குமார் சுதீப்பை வைத்து படம் இயக்கும் வேலையில் இருந்த போதுதான் லிங்கா வாய்ப்பு அவரை தேடி வந்தது. ரஜினியின் உடல்நிலையை எடுத்துக்கூறி லிங்காவை முதலில் முடித்துவிட்டு சுதீப் படத்தை இயக்குவதாக அவர் கூற, சுதீப்பும் அதற்கு ஒத்துக் கொண்டார். இப்படியொரு சூழலில்தான் ரஜினியின் லிங்கா படத்தில் வில்லனாக நடிக்க சுதீப்பை கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை என்ற தவறான தனவலை சில ஊடகங்கள் வெளியிட்டன. 
 
ரஜினி படத்தில் நடிக்க மறுத்தேனா? பதறிப்போன சுதீப் அவசரமாக தனது ட்விட்டரில், ரஜினி படத்தில் நடிக்க கேட்கவில்லை, கேட்டால் கண்டிப்பாக நடிப்பேன் என்று விளக்கமளித்துள்ளார்.
 
எப்படியெல்லாம் பீதியை கிளப்புறாங்க...

வெப்துனியாவைப் படிக்கவும்