காரணம் இருக்கிறது.
ஆண்ட்ரியா, ரம்யா நம்பீஸன், ஸ்ருதிஹாசன் எல்லாம் பாடிய போது அதனை உற்சாகமாக வரவேற்ற ரசிகர்களும், திரையுலகினரும் லட்சுமி மேனன் பாடிய போது மட்டும் அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. ஆ ஊ ன்னா ஏதாவது நடிகையை பாட வச்சிடுறாங்க என்ற சலிப்புதான் அதிகம் கேட்டது. இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் பிரஸ்மீட் வைத்தே பிளந்து கட்டினார். ஆண்ட்ரியா முதற்கொண்டு அனைத்து நடிகைகளையும் அவர் பிரித்து மேய்ந்தாலும் லட்சுமி மேனன் பாடிய பிறகு அவர் விமர்சித்ததால் அவரது விமர்சனம் முழுக்க லட்சுமி மேனனிடமே நிலைகொண்டது.
இந்நிலையில் யார் பாடச் சொன்னாலும் - படப்பிடிப்பில் சும்மாச்சுக்கும் பாடினாலும் - கர்னாடக சங்கீத கீர்த்தனைகளைதான் எடுத்துவிடுகிறார். கேட்டால் நாலம்புலேர்ந்தே கர்னாடக சங்கீதம் படிக்கிறேனாக்கும். எனக்கு முறைப்படி சங்கீதம் அத்துபடி. வேணும்னா ஒரு பாட்டை சொல்லுங்க, அது எந்த ராகம்னு கரெக்டா சொல்றேன் என்று அவராகவே சங்கீத பரீட்சைக்கு தயாராகிறார்.