நல்லதில் முடியுமா நகுலின் நாரதர் கலகம்

திங்கள், 15 ஏப்ரல் 2013 (19:32 IST)
FILE
சன் பிக்சர்ஸின் அளவுக்குமீறிய விளம்பரத்தால் நகுலின் காதலில் விழுந்தேனும் வேறு ஒரு படமும் ஓடியது. அது தனக்காக ஓடியது என்று நகுல் ‌நினைத்துக் கொண்டதன் விளைவு... கோடிகளில் சம்பளம் கேட்டு வீட்டில் விட்டத்தை பார்க்கும்படி ஆனது.

ஆஸ்கர் பிலிம்ஸின் வல்லினம் படம் காரணமாக நான் ராஜாவாகப் போகிறேன் போன்று ஒன்றிரண்டு படங்கள் கிடைத்தன. இவை வெளியானால்தான் நகுலின் வருங்காலம் பற்றி தெ‌ரியவரும்.

இந்நிலையில் மேலும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இன்றைய நிலவரப்படி இதுவும் ஒரு காமெடிப் படம். கிட்டத்தட்ட இன்னொரு ஹீரோவாக வருகிறார் சந்தானம். நாகா வெங்கடேஷ் படத்தை இயக்குகிறார். வெற்றிவேல் ஃபிலிம் இன்டர்நேஷனல் படத்தை தயா‌ரிக்கிறது.

என்னடா... தலைப்புக்கும் மேட்டருக்கும் சம்பந்தமேயில்லையே? இருக்கிறது. படத்தின் பெயர் நாரதன். கதையை இதை வைத்து ஓரளவு யோசித்திருப்பீர்கள்தானே.

வெப்துனியாவைப் படிக்கவும்